×

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சமத்துவ பொங்கலிட்டு மாணவ, மாணவிகள் உற்சாகம்!

நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கலிட்டு, உற்சாக நடமாடி பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தென் தமிழகத்தில் கல்லூரிகளில் இன்று சமத்துவ பொங்கலிட்டு மாணவ, மாணவிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கல்லூரி முழுவதும் தோரணங்கள் மற்றும் வண்ண கோலமிட்டு சிறப்பான வகையில் அலங்காரம் செய்யப்பட்டது. மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் பொங்கலை கொண்டாடினர்.

பின்னர் தமிழர்களின் வீரத்தை போற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. மேலும் பொங்கல் கொண்டாட்டத்தில் சித்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சமத்துவ பொங்கலிட்டு மாணவ, மாணவிகள் உற்சாகம்! appeared first on Dinakaran.

Tags : Samatthu Pongalittu ,Nellie Government Siddha Medical College ,Nellai ,Government Siddha Medical College ,Samattva ,Pongal ,festival of Pongal ,South Tamil Nadu ,Nellie Govt. Siddha Medical College ,Samatwa Pongalit ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் புகார் தர எண்கள் அறிவிப்பு